headlines

img

ஆப்கன் கொடூரம்

ஆப்கனில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்விகற்க முடியாது  என்று அந்நாட்டு உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவிப்புக்கு சர்வ தேச அளவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானத்தில் கடந்தாண்டு  தலிபான் கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் மாண வர் மற்றும் மாணவிகள் வகுப்பறையில் ஒன்றா கக் கல்வி கற்கத் தடை விதித்தனர். அடுத்தகட்ட மாகப் பெண்கள் உயர்கல்விக்குச் செல்ல முடியாத துயரமான நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஆப்கா னிஸ்தானில் உள்ள பல்லாயிரக்கணக்கான பெண் கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதினர். பொருளாதாரம், பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம், இதழியல் உள்ளிட்ட பாடங் களை ஆவலுடன் படிக்க இருந்த நேரத்தில்  உயர்கல்விக்கு தலிபான்கள் தடை விதித்து விட்டனர். தலிபான்களை ஒழிக்கப்போவதாக ஆப்கனை  ஆக்கிரமித்த அமெரிக்கா, அந்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியா மல் தோல்வியடைந்து  வெளியேறியது. இதன் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான் கள், முந்தைய ஆட்சி போல் இல்லாமல் ஒப்பீட்ட ளவில் மிதமான ஆட்சியை வழங்குவோம் என்று சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்திருந்தனர். ஆனால் அந்த வாக்குறுதியை அவர்கள் காப் பாற்ற வில்லை. ஆப்கன் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துகி றார்கள்.  

அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து  விலகிக் கொண்டிருந்தபோதே முற்போக்காளர்கள் பலர் அந்நாட்டிலிருந்து வெளியேறினர். விளை யாட்டு, இசை ஆகியவற்றையும் தலிபான்கள் ஏற்காதவர்கள். இதனால் கால்பந்து, மல்யுத்தம், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் திறமை யான வீரர்களும் வீராங்கனைகளும் அந்நாட்டில் இருந்தாலும் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்று கருதி வெளிநாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டனர். மத அடிப்படைவாதிகளான தலிபான்கள் பெண்கள் கல்வி கற்பதை மட்டுமல்ல; ஆண்கள் விளையாடுவதைக் கூட ஏற்க மறுப்ப வர்கள். சர்வதேச அளவில் கிரிக்கெட்போட்டிக் காகச் சென்ற ஆப்கானிஸ்தான் அணி நாடு திரும் பாமல் ஐக்கிய அரபு எமிரேட்டில் தஞ்சமடைந்தது.  

தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூகத்தை வேகமாக அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்று கொண்டிருக்கிறது.  விண்வெளி யிலும் பெண்கள் காலடி வைத்துவிட்டனர். உலகில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனை க்கு ஆண்கள் துணையில்லாமல் பெண்களே விமானத்தை இயக்கி ஆண்களுக்கு எந்தவகை யிலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துவிட்டனர். இதற்கு பிறகும் தலிபான்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. பெண் குழந் தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை அழிப்ப தன் மூலம் அவர்கள் என்ன சாதிக்கப் போகி றார்கள். மாறாக தங்களது நாட்டின் எதிர்காலத் தைத்தான் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆப்கன்  பெண்களின் எதிர்காலத்தை நாசம் செய்த தலிபான்களை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும். தலிபான்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சர்வதேச அழுத்தம் தேவை.